பணம் முக்கியம் இல்லை, மானம் தான் முக்கியம்; இன்னொரு ராமதாஸ் பிறக்கமாட்டார் – பாமக நிறுவனர் ராமதாஸ்!

இந்த ராமதாஸை விட்டுவிட்டால் இன்னொரு ராமதாஸ் பிறக்கமாட்டார். அதனால் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என ராமதாஸ் கூறினார்.

நேற்று சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சூரமங்கலத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக ஆட்சி நடைபெற வேண்டும் அதற்காக தனித்து நின்று அன்புமணியை முன்னிலைபடுத்தி தேர்தலிலும் போட்டியிட்டோம். கடுமையாக உழைத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை கூட அப்போது பெறவில்லை.

வட தமிழ்நாட்டில் வாழும் வன்னியர்கள், ஒட்டு மொத்த மக்களும் வாக்களித்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். தமிழகத்தில் நாம் ஒரு சீட்டு, 2  சீட்டு என்று பிற கட்சிகளிடம் கெஞ்சுகிறோம். வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் 70 எம்எல்ஏக்கள் வரை வந்திருக்க முடியும். பணம் முக்கியமில்லை மானம் தான் முக்கியம் என்று பயணிக்க வேண்டும்.

இந்த ராமதாஸை விட்டுவிட்டால் இன்னொரு ராமதாஸ் பிறக்கமாட்டார். அதனால் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என கூறினார்.

author avatar
murugan