#IPL2022: கடைசி போட்டியில் புதிய சாதனை.. ராஜஸ்தான் அணியை ஓடவிட்ட மொயின் அலி!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மொயின் அலி, 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 68-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவன் கான்வே களமிறங்கினார்கள். இதில் 2 ரன்கள் எடுத்து ருதுராஜ் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

தொடக்கம் முதலே மொயின் அலி அதிரடியாக அடிவர, 5-வது ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலே மொயின் அலி, சிக்ஸர் அடித்து அசத்தினார். அதனைதொடர்ந்து இந்த ஓவரின் அனைத்து பந்துகளையும் 4 ரன்கள் அடித்து 6-4-4-4-4-4 என்ற கணக்கில் 26 ரன்கள் விளாசி, 19 பந்துகளுக்கு 51 ரன்கள் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அதுமட்டுமின்றி, சென்னை அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த பட்டியலில் 2-ம் இடத்தில் மொயின் அலி உள்ளார். முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா 16 பந்துகளிலும், தோனி 20 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment