சென்னையில் காலையில் வாட்டி வதைத்த வெயில்…மாலையில் மிதமான மழை.!

சென்னை உள்ளிட்ட மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம்,  மணிமங்கலம் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 

தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில்,  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்பொழுது மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம்,  மணிமங்கலம்  மற்றும் முடிச்சூர், போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மிதமான  மழை பெய்து வருகிறது.  காலையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்தது மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.