விவசாயம் செய்துகொண்டிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்!

வயலில் விவசாயம் செய்துகொண்டிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மு க ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எதுவும் பயன் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய பெருமக்களிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். மேலும், இந்த போராட்டத்தின் போது அவர் பேசிய வீடீயோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal