இந்தியாவில் சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பாக அதிகமாக வதந்திகள் பரவியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
138 நாடுகளில் கொரோனா தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 138 நாடுகளில் பரவிய 9,657 வதந்திகள் குறித்து 94 அமைப்புகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில் இருந்து மட்டும் (18.07 சதவீதம்) சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 9.74 சதவீதமும், பிரேசில் 8.57 சதவீதமும், ஸ்பெயின் 8.03 சதவீதம் வதந்திகளை பரப்பியுள்ளன.
84% வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவியதாகவும், பேஸ்புக் மூலமாக மட்டும் சுமார் 66.87 சதவிகிதம் தவறான தகவல் பரவப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. அதிக இன்டர்நெட் வசதி, இன்டர்நெட் பற்றிய குறைவான அறிவு ஆகிய காரணங்களால் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து குறித்து WHO எச்சரித்துள்ளது:
முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக எச்சரித்திருந்தது. சமூக ஊடகங்களில் பெறப்பட்ட தகவல்களை நம்பகமான ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கவும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதுவரை உலகம் முழுவதும் சுமார் 22.58 கோடி மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 46.49 லட்சம் பேர் இறந்துள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், 4.13 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.64 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா இந்தியாவில் இதுவரை 3.33 கோடி மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…