178 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ள அதிசய சூரிய கிரகணம்..! எப்போது? எப்படி பார்க்கலாம்..?

சுமார் 178 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதிசய சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் போல தோன்றும் என கூறப்படுகிறது.

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் வசிப்பவர்களால் பார்க்க முடியாது.  நம்முடைய இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை இது நிகழவுள்ளது. இந்த கிரகணமானது அமெரிக்காவின் சில பகுதிகளில் தெரியும் என கூறப்படுகிறது.

அதன்படி, அமெரிக்காவில் மெக்சிகோ தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் தெரியும் என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க இயலாதவர்களுக்கு பார்க்கும் வண்ணம், நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை நாசாவின் இணையதள பக்கத்தின் மூலமாக நாம் காணலாம்.

இந்த சூரிய கிரகணம் கடைசியாக 1845 ஆம் ஆண்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகாளய அமாவாசை தினத்தில், இந்த அரிய கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில்,  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது என  கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.