அமைச்சர் பொன்முடி கார் பைக் மீது மோதி விபத்து – இளைஞர் கவலைக்கிடம்..!

அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பத்தில் அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞரை அமைச்சர் பொன்முடி அவரது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சரின் கார் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.