தமிழகம் முழுவதும் மீன்களின் தரத்தினை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவு .!

தமிழகம் முழுவதும் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து  மீன்கள் மற்றும் மீன்களின் தரத்தினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து  நேற்று முன்தினம் இரவு 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 53 மீன் கடைகளில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த கடைகளில் இருந்த ரசாயனம் கலந்த 2 டன் மீன்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan