திமுக கூட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட மின்சாரம்.! பொறியாளரை கடிந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன்.!

திமுக கூட்டத்தில் பாதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மின் பொறியாளரை போனில் அழைத்து அமைச்சர் துரைமுருகன் கடிந்து கடிந்துகொண்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க திமுக முனைந்துள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து இருந்தார்.இதனை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விழா ஊட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மின்தடை :

அதில், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விழா தொடங்குகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது ஜெனரேட்டர் இயக்கவும் தாமதமானது.

நேரில் வந்து பார்க்கணும் :

இதனால், அமைச்சர் துரைமுருகன் உடனடியாக, அங்குள்ள மின்பொறியாளருக்கு போன் செய்து , இங்கு 3 அமைச்சர்கள் விழாவில் இருக்கிறோம். இரண்டு முறை மின்சாரம் தடைபட்டு விட்டது. என கேட்டுள்ளார். அதற்கு அந்த மின் பொறியாளர் , எங்கு மின் தடை என கேட்டதாக தெரிகிறது. உடனே, தன்னை நேரில் வந்து பார்க்குமாறு அமைச்சர் துரைமுருகன் கூறிவிட்டு போனை கொடுத்துவிட்டார். அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் நடந்த இந்த சம்பவம் நேற்று முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment