ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் லட்சாதீபதியான வயது முதிர்ந்த பெண்மணி!

மேற்குவங்கத்தில் ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் பெண் ஒருவர் லட்சாதீபதியாகியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் தெற்கு முனையில் உள்ள தெருவில் வானமொலி எனும் கிராமத்திலுள்ள வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் நதியில் மீன் பிடிக்க சென்ற பொழுது 52 கிலோ மீனை நடுஇரவில் பிடித்து அதை அவரே வெளியே இழுத்து வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். இந்த மீன் கிலோவுக்கு 6,200 என விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஒரு மீன் மட்டுமே 3 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

ஒரே நாளில் அந்த பாட்டி லட்சாதிபதி ஆகியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் அந்த மீன் உயிருடன் பிடிக்கப்படவில்லை அந்த மீன் உயிர் இழக்க கூடிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து கூறிய கிராமவாசி ஒருவர் கப்பலில் மோதி இந்த மீன் காயமடைந்திருக்கலாம் என கூறி உள்ளார். ஆனால் உண்மை எதுவென்று தெரியாவிட்டாலும் பாட்டி ஒரு நாள் இரவிலேயே லட்சாதிபதியாகி உள்ளது மட்டும் உண்மை.

author avatar
Rebekal