மும்பை அணியை வெற்றி பெற வைத்த சென்னை வீரரின் தம்பி!!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தற்போது 168 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 30 ரன்களும் குவின்டன் டி காக் 35 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் விளாசி உள்ளது.

 

பின்னர் எளிதான இலக்கை துரத்திய டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் துவக்கம் முதலே சரியாக விட முடியவில்லை அந்த அணியின் ஷிகர் தவான் மற்றும் 22 பந்துகளில் 33 ரன் விளாசினார் அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர் அக்ஷர் பட்டேல் மற்றும் 23 பந்துகளில் 26 ரன் எடுத்தார்.இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன் மட்டுமே சேர்த்தது டெல்லி அணி இதன் மூலம் மும்பை அணி 40 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது

 

மும்பை அணியின் சார்பில் ராகுல் சகார் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பும்ரா தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் ராகுல் சாகர் இவர் வேறு யாருமில்லை சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது,. இதன் மூலம் சென்னை அணியின் வீரர் வீரரின் தம்பி மும்பை அணியை வெற்றி பெற வைத்தது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment