ஓடாத பாரதிராஜா படத்தை ஓட வைத்த எம்.ஜி.ஆர்! மனசு முழுக்க தங்கம் தான்!

M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர்  தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு.

அந்த வகையில், பாரதி ராஜா இயக்கிய புதுமை பெண் படம் வெளியான சமயத்தில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் பாரதி ராஜாவும் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் வேதனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர் பெரிய விஷயம் செய்து படத்தை ஓட வைத்து கொடுத்துள்ளார். பாரதி ராஜா புதுமைப்பெண் படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி ரீலிஸ் செய்தார்.

ஆனால், படம் வெளியான சமயத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரவில்லை எனவே, பாரதி ராஜா ரொம்பவே வேதனைப்பட்டாராம். பிறகு தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கலாமா? என்று பாரதி ராஜாவிடம் கேட்டாராம். அதற்கு பாரதி ராஜாவும் சம்மதம் தெரிவிக்க ஏவிஎம் சரவணன் எப்படியோ பேசி எம்ஜிஆர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்களாம்.

அங்கு சென்றவுடன் எம்.ஜி.ஆர் என்ன விஷயம் என்று கேட்டாராம். அதற்கு ஏவிஎம் சரவணன் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான புதுமைப்பெண் படம் சரியாக போகவில்லை வேதனையாக இருந்தது உங்களை பார்த்தால் கொஞ்சம் மனது சந்தோசமாக இருக்கும் என்று உங்களை பார்க்க வந்தோம் என்று கூறினார்களாம்.

உடனடியாக எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்கள் சிலருக்கு போன் செய்து படத்தின் டிக்கெட் வரி விலக்கை நீக்குங்கள் என கூறி நான் சொன்னதாக இதனை எல்லா தியேட்டருக்கு அனுப்புங்கள் என்பது போல கூறினாராம். அப்படி செய்த பிறகு படம் பார்க்க பலரும் வருகை தந்த நிலையில், படம் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.  எம்ஜிஆர் அப்படி செய்த காரணத்தால் தான் படம் மதுரையில் மட்டுமே 200 நாட்கள் ஓடியது என்றும் ஏவிஎம் சரவணன் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.