மெக்சிகோ காட்டுத்தீ – 2 பேர் பலி ; 200 வீடுகள் சேதம்..!

மெக்சிகோவில் உள்ள சியாரா பிளாங்கா எனும் மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் 5,000 ஏக்கருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்தவர்கள் வயதான தம்பதிகள் எனவும், அவர்கள் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தால் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal