அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது.
ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு விடுத்துள்ள்ளது. இது குறித்து , அந்த மைதானத்தின் விளையாட்டு தலைசாமி கண்காணிப்பாளர் ரியோ டி ஜெனிரோ கடிதம் மூலம், பிரேசிலின் மரக்கானா ஸ்டேடியத்தின் ஹால் ஆஃப் ஃபேமில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.