#BREAKING: மாநில உரிமைக்களுக்காக பிரதமருடன் சந்திப்பு- முதல்வர்..!

டெல்லியில் நாளை பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

டெல்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறேன். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் , நிதின் கட்கரி , நிர்மலா சீதாராமன்  அவர்களையும் சந்திக்கவிருக்கிறேன்.

அமீரக பயணம் வெற்றிகரமாக அமைந்த நிலையில் அடுத்த பயணம் இந்திய தலைநகராம் டெல்லியை நோக்கி அமைகிறது.

மாநில உரிமைக்களுக்காக பிரதமருடன் சந்திப்பு:

திட்டங்களுக்குக்கான நிதி, மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட  மாநில உரிமைக்களுக்காக பிரதமருடன் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப்பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது.

ஏப்ரல் 2-ஆம் நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா, மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்த்துள்ளார்.

 

author avatar
murugan