லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு, ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இதுவரை மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை தூண்டியது. காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் பாடிய குட்டி ஸ்டோரி என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது. இதனிடையே படத்தின் படப்பிடிப்புகள் பெருபாலும் முடிவடைந்ததாகவும், இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும் என்று படக்குழு தெரிவித்தது.
அதன்பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளை இயக்குனர் தொடங்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதற்கிடையில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் முந்தைய படங்கள் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் உரிய அனுமதி பெறுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சை எழுந்தன. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சாந்தனு, அண்மையில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…