‘தமிழகத்தில் தினசரி அரங்கேறும் படுகொலைகள்’ – அண்ணாமலை தலைமையில் இன்று பேரணி..!

இன்று அண்ணாமலை தலைமையில், தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரபு என்ற ராணுவ வீரர்  படுகொலை செய்யப்பட்டதை  கண்டித்தும், பாஜக பட்டியல் இன தலைவர்  தடா பெரிசாமியின் கார் மீது நடந்த கொலைவெறி தாக்குதல் குறித்து போலீசாரிடம் பாதுகாப்பு தரவேண்டி கொடுத்த மனுவை உதாசீனப்படுத்தியதற்காகவும் இன்று அறப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த பேரணி அண்ணாமலை தலைமையில், தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணி, இன்று காலை ஓமந்தூர் இராமசாமி மருத்துவமனை அருகில் இருந்து,போர் நினைவுச் சின்னம் வரை நடைபெறவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment