அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கோ! அந்த நடிகரை வற்புறுத்தும் குடும்பம்?

நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா இருவரும் பாகுபலி படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் அற்புதமாக இருந்திருக்கும். இந்த படத்தை பார்த்த பலரும் இருவரும் நிஜமாகவே ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனவும் ரசிகர்கள் ஆசைப்பட்டது உண்டு. ரசிகர்கள் ஆசைப்பட்டது போலவே இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் அந்த சமயமே மிகவும் தகவல் பரவியது.

ஆனால், இவருமே தங்கள் இருவரும் காதலிக்கும் செய்திகள் குறித்து பேசவே இல்லை. இந்த நிலையில், அடிக்கடி அனுஷ்கா திருமணம் குறித்த தகவலும், பிரபாஸ் திருமணம் குறித்த தகவலும் பரவி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது ஒரு செய்தி மிகவும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், பிரபாஸ் குடும்பம் அவரை அனுஷ்காவை திருமணம் செய்ய கூறி வற்புறுத்தி வருகிறதாம்.

ரீ -என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.! புது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

பிரபாஸிற்கு வயதும் ஆகி கொண்டே இருக்கும் காரணத்தால் அவர் அனுஷ்காவை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனால் நன்றாக இருக்கும் என பிரபாஸின் குடும்பம் விரும்புகிறதாம். இதனால் விரைவில் பிரபாஸிற்கு திருமணம் செய்து வைக்கவும் அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் இது வதந்தி தகவலா அல்லது உண்மை தகவலா என பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் மனம் திறந்து பதில் அளித்தால் தான் தெரியவரும். இருப்பினும் பெரிய அளவில் வதந்தி தகவலுக்கு எல்லாம் அனுஷ்கா பதில் அளித்து இல்லை இருந்தாலும் அவருடைய திருமணம் பற்றிய தகவல் இப்படி பரவி வருவதன் காரணமாக அவரும் இது பற்றி விளக்கம் அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகை அனுஷ்கா தற்போது மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதைப்போல பிரபாஸ் தற்போது சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய அளவில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.