தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு.! தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது.!

தூத்துக்குடி விஏஓ வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இன்னொரு குற்றவாளி மாரிமுத்து இன்று கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஏற்கனவே ராம சுப்ரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டார். மீதமுள்ள ஒரு குற்றவாளியை தேடும் பணியில்  தனிப்படை போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், இன்னொரு குற்றவாளியான மாரிமுத்துவை இன்று நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.