மவோயிஸ்ட் தாக்குதல்.., சத்தீஷ்கரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!

சத்தீஷ்கரில் மவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் மாவட்டத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரும், மவோயிஸ்ட்களும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர்.

சத்தீஸ்கர் டிஜிபி டிஎம் அவஸ்தி கூறுகையில், பிஜாப்பூரில் உள்ள டாரெம் காடுகளில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். மவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். இருபுறமும் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் 5  கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 10 வீரர்கள் காயமடைந்தனர்.

பெரிய தேடல் தொடங்கியது:

இந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினரின் அதிகமானனோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி கூறினார். அதேசமயம், மவோயிஸ்ட்டுகளைத் தேடி காட்டில் ஒரு பெரிய தேடல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

author avatar
murugan