- கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை முதலில் எம்.ஜி.ஆர் படமாக எடுக்க நினைத்து தோல்வி கண்டார்.
- அதன் பிறகு பாரதிராஜாவும் இதனை படமாக்க திட்டமிட்டு பிறகு நடக்காமல் போனது.
- தற்போது இந்த கதையை இயக்குனர் மணிரத்னம் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
- இப்படத்தை 2.O படத்தைபோல அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறது லைகா நிறுவனம்.
மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கசிவந்த வானம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த பட வேலையில் பிசியாகிவிட்டார். இந்த படம் மணிரத்னத்தின் கனவு படம் என்றே கூறப்படுகிறது. அந்த படம் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.
இந்த படத்தில் நடிக்க முதலில் விஜய், அஜித் என முன்னனி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி கண்டுவிட்டதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதனால் , அடுத்தாக விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் வழக்கம்போல் புல்லானதால், அவருக்கு பதிலாக கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். அதிலும் அவரது கதாபாத்திரம் வஞ்சியதேவன் எனவும் கூறப்படுகிறது.
DINASUVADU