நடப்பாண்டு 10, 12 பொதுத்தேர்வு ரத்து..ம‌ம்தா பானர்ஜி அறிவிப்பு.!

கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது எனவும்  அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்  என மேற்கு வங்க முதல்வர் ம‌ம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நேற்று  கொரோனாவால் அதிக அளவில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,72,265 ஆக உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இப்போது மேற்கு வங்கத்தில் குணமடைந்தவர்களின் சதவீதம்  90.11  உள்ளது. மேலும், நேற்று  கொரோனாவால்  53 பேர் உயிரிழந்ததால்  உயிரிழப்பு எண்ணிக்கை 7,403 ஆக உயர்ந்ததுள்ளது.

author avatar
murugan