கோலாகலமாக இன்று நடைபெற்ற யாரடி நீ மோகினி சைத்துவின் திருமணம்!

கோலாகலமாக இன்று நடைபெற்ற யாரடி நீ மோகினி சைத்துவின் திருமணம்!

இன்று  யாரடி நீ மோகினி சைத்ராவின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

யாரடி நீ மோஹினி எனும் முன்னணி தனியார் தொலைக்காட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை தான் சைத்ரா. இவர் கடந்த பல வருடங்களாக சினிமா துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிச்சயமும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தாலி கட்டி தமிழ் கலாச்சார முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு மற்ற சீரியல் பிரபலங்களும், நெருங்கிய தோழிகளாகிய ரேஷிமா, ஷபானா மற்றும் நட்சத்திரா உள்ளிட்டவர்களும் வருகை தந்துள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube