இன்று முதல் மதுரை – சிங்கப்பூர் இடையே மீண்டும் விமான சேவை – பயணிகள் மகிழ்ச்சி!

மதுரைசிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

இந்நிலையில்,கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்த மதுரைசிங்கப்பூர் இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி,சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தடையும்.அதைப்போல மதுரையிலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு விமானம் சிங்கப்பூர் சென்றடைகிறது.

மேலும்,இன்று முதல் வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மதுரைசிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை-சிங்கப்பூர் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கி இருப்பது விமானப் பயணிகள் மத்தியில்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.