மதுரை விவகாரம் :மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில்  வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தது.

அதேபோல் பெண் அதிகாரி மற்றும்  அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையரையும் மாற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும்  உதவி காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பின் வழக்கு  விசாரணை வரும் 30-க்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Leave a Comment