மதுரை அருகே ஓட்டுனர் பற்றாகுறையால் லாரி ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பணிமனையில் இருந்து பேருந்தை இயக்கியவர் லாரி ஓட்டுநராக இருந்த டேனியல் ஆவார். ஒட்டுநர் பற்றாக்குறையால் டேனியல் விளச்சேரி செல்லும் அரசுப் பேருந்தை இயக்கி திருநகர் 7 வது ஸ்டாப் அருகே சென்ற போது மின்கம்பம் மோதி விபத்துக்குள்ளானது.அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பீதியடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
source: dinasuvadu.com