மதுரை : மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்.! 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால் இழக்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது மாணவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் மின் ஊழியர்கள் 2 பேர் , கிரேன் ஆபரேட்டர் ஒருவர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.