அயலான் படத்திற்கான இடைக்கால தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் நாளை ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இன்று காலையில் இருந்தே படம் ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என ஒரு குழப்பமான தகவல் ஒன்று வெளியாகி கொண்டு இருந்தது.

அதற்கு காரணம் அயலான் திரைப்படத்தை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் 1 கோடி ரூபாய் கடனாக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம்  வாங்கி இருந்தது.  இதில் 50 லட்சத்தை  மட்டுமே திருப்பி செலுத்தி இருந்த நிலையில் மீதி பணத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் செலுவத்தவில்லை.

பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – நடிகை நயன்தாரா அட்வைஸ்! 

இதன்காரணமாக சென்னை நீதிமன்றத்தில் டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனையடுத்து, 24 ஏ.எம். ஸ்டூடியோஸ்  கடனாக பெற்றுக்கொண்ட  மீதித் தொகையை செலுத்தவில்லை என்ற காரணத்தால் அயலான் ரிலீஸுக்கு சென்னை நீதிமன்றம்  தடை விதித்திருந்தது. இதனால் அயலான் படம் திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகம் எனவும், படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்களும், சிவகார்த்திகேயனும் மிகவும் சிரமைபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், ‘அயலான்’ திரைப்படத்துக்கு விதித்த இடைக்காலத் தடையை  சென்னை உயர்நீதி மன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.  எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய மீதமுள்ள ரூ.50 லட்சத்தை ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் செலுத்துவதாக 24 ஏ.எம். ஸ்டூடியோஸ்   நிறுவனம் உறுதியளித்த நிலையில், இடைக்காலத் தடையை  சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியது.  எனவே, திட்டமிட்டபடி சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.