அரியலூர் : அனிதா மருத்துவ வளாகம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!   

அரியலூர் மருத்துவ கல்லூரியில் புதிய வளாகத்திற்கு மாணவி அனிதா பெயர் சூட்டி முதல்வர் அறிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா எனும் மாணவி, மருத்துவ நுழைவு தேர்வான நீட் நுழைவு தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, பின்னர்,  2017 செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தடை :

அதன் பிறகு நீட் தேர்வுக்கு எதிராகவும், அதனை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீட் தடை மசோதா நிறைவேற்றயது. நீட் தேர்வை தடை செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

நீட் பயிற்சி மையம் : 

நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிர்நீத்த அனிதா நினைவாக, ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அனிதா பெயரில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

22 கோடி ரூபாய் :

தற்போது , கடந்த கல்வியாண்டு முதல் துவங்கப்பட்ட அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரியில் 22 கோடி ரூபாய் செலவில் புதிய நவீன வசதிகளுடன் மருத்துவ வளாகம் கட்டப்பட்டுள்ளது.

அனிதா மருத்துவ வளாகம் :

இந்த கட்டத்திற்கு தற்போது அனிதாவின் பெயர் வைத்து, அனிதா மருத்துவ வளாகம் என பெயர் வைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment