எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளில் அவரின் வெற்றிகளை நினைவுகூர்வோம் – கமல்ஹாசன்

அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினத்தை முன்னிட்டு கமலஹாசன் ட்வீட்.

அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலையின் மூலம் கிடைத்த பிராபல்யத்தை சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் சிறப்பாகச் செயல்படப் பயன்படுத்த முடியும் என்பதை உலகிற்குக் காட்டியவர்களில் தனித்துவமிக்க எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளில் அவரின் வெற்றிகளை நினைவுகூர்வோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.