தமிழ்மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது-பிரதமர் மோடி..!

தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது என்று பிரதமர் மோடி இன்று மங் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, உலகிலேயே மிக பழமையான தமிழ் மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அபிமானி நான் என்று கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் சீக்கிய குரு தமிழ் மொழி குறித்து பெருமையாக கூறியிருக்கிறார். திருக்குறளும் மிக புகழ் வாய்ந்தது.

மிகவும் தொன்மையான பழைய மொழி இந்தியாவில் இருப்பது நம் அனைவருக்கும் பெருமை என்று உரைத்துள்ளார். தமிழ் மொழி மீதுள்ள என் அன்பு என்றுமே குறையாது எனவும் இம்மொழி குறித்து பெருமிதம் அடைவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் பருவ மழை காலம் பற்றியும் பேசியிருக்கிறார். மழை நீர் சேமித்து வைக்க வேண்டும் என்று மக்களிடம் உரையாற்றியுள்ளார்.