தன்னைவிட அழகா இருந்ததால் தங்கையை 189 இடத்தில் குத்தி கொலை செய்த அக்கா ..!

ரஷ்யாவை சேர்ந்த எலிசவேடா (22) இவரது சகோதரி ஸ்டெனிபானியா (17) சிறு வயதிலிருந்தே அவர்கள் அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்து உள்ளனர். வளர்ந்த பின்னர் இருவருமே  மாடலிங் துறையில் நுழைந்தனர்.
ஸ்டெனிபானியா மிகவும் அழகான இருந்ததால் எலிசவேடாவிற்கு பொறாமை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த  2016-ம் ஆண்டு ஸ்டெனிபானியா உடலில் 189 முறை கத்தியால் குத்தி நிர்வாணமாக்கி கண்களை வெளியில் எடுத்து , வலது காதை அறுத்து கொலை செய்தார்.
இதனால் சம்பவ இடத்திலேயே ஸ்டெனிபானியா இறந்தார். அந்த நேரத்தில் ஸ்டெனிபானியாவின் காதலன் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது  வீட்டில் ஸ்டெனிபானியா  ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

(வட்டமிடப்பட்டவர் தான் கொலை செய்த எலிசவேடா )
உடனே எலிசவேடாவை  கட்டிப் போட்டுவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எலிசவேடாவை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி எலிசவேடா மனநல சிகிசைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த  சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் எலிசவேடாவின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

author avatar
murugan