நிறைவு பெற்றது மக்களவை தேர்தல் ! 23 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இதுவரை 6-கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது .

இன்று 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்ற  வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.மக்களவை தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள்,உத்திர பிரதேசம்-13 தொகுதிகள்,பஞ்சாப் -13 தொகுதிகள்,மேற்குவங்கம் -9 தொகுதிகள்,மத்திய பிரதேசம் -8 தொகுதிகள்,பீகார் -8 தொகுதிகள்,இமாச்சல பிரதேசம்-4 தொகுதிகள்,ஜார்கண்ட் -3 தொகுதிகள்,சத்தீஸ்கர்-1 தொகுதிகளில் நடைபெற்றது.

மேலும் தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வருகின்ற 23-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Leave a Comment