நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா நிறைவேற்றம்

நாடு முழுவதும் உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மக்களவையில் ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைப்பது  தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்ளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பதிலை அடுத்து குரல் வாக்கு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.