இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலமும் புது புது வழியில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அகமதாபாத் போலீசார் ஊரடங்கை ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தது.
ட்ரோன் மூலம் கண்காணித்து இதுவரை 48 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாம்.