உள்ளாட்சித் தேர்தல் : மறுவாக்குப்பதிவு தொடக்கம்

  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது
  • கடலூர், தூத்துக்குடி, நாகை, தேனி, மதுரையில் உள்ள 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது .

தமிழகத்தில் புதிதாக  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகளை மாற்றிவழங்கிய காரணத்தால் 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழ்நாடு  மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இதனால் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ஊராட்சியில் 67 முதல் 71 வரையுள்ள 5 வாக்குச்சாவடிகள்,மதுரை மாவட்டம் வஞ்சி நகரம் ஊராட்சியின் 91வது வாக்குச்சாவடி,  கடலூர் மாவட்டம் வில்லங்கப்பட்டி ஊராட்சியில் 242வது வாக்குச்சாவடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாணி கோட்டகம் ஊராட்சியில்  119வது வாக்குச்சாவடி, தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சியில் 52வது வாக்குச்சாவடி உள்ளிட்ட 9 வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 5 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.