#Breaking:லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்துபவர்கள் வழக்கு தொடர உரிமை இல்லை- உயர்நீதிமன்றம் ஆணை!

லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்துபவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது..

ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்க கோரி கலைச்செல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும்,பணப்பரிவர்த்தனை தொடர்பான முன்விரோதத்தால் வழக்கு தொடர்ந்ததாக கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.