சென்னை ஆவடி அடுத்த உள்ள கிறிஸ்து காலனியில் அன்னை தெரசா 3-வது காலனியை சார்ந்த ரவிவர்மா (53).இவர் கடந்த 6 வருடமாக தனது வீட்டில் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.
இவரது நாட்டியபள்ளியில் அதே பகுதியை சார்ந்த 11 வயது சிறுமி ஒருவரும் பரதநாட்டிய பள்ளி பயின்று வந்து உள்ளார்.கடந்த 29-ம் தேதி பரதநாட்டிய பள்ளிக்கு வந்த அந்த சிறுமியை ரவிவர்மா தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் பரதநாட்டிய பள்ளிக்கு செல்லமாட்டேன் என கூறி அழுது உள்ளார்.அப்போது சிறுமியிடம் ஏன் என விசாரித்தபோது தனக்கு ரவிவர்மா பாலியல் தொந்தரவு கொடுத்ததை கூறினார்.
பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பரதநாட்டிய பள்ளியை முற்றுகையிட்டு ரவிவர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ரவிவர்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் கொடுத்தனர்.அவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு விட்டார்.
இதை தொடர்ந்து ரவிவர்மாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் ரவிவர்மாவை அடைத்தனர்.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…