இந்த மருந்துகளை விற்றால் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து – தமிழ்நாடு மருந்துகட்டுப்பாட்டு வாரியம்

மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு. 

தமிழகத்தில் சமீப நாட்களாக போதை பொருட்களை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

போதை தரும் மருந்துகளை தவறான பயன்படுத்துவதற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக போதை தரக்கூடிய மருந்துகள் விற்கப்படுவதாக புகார் எழுந்து வந்த நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment