100-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்…!

100-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்.

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் இன்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக-வின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.