தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்!

தமிழகம் முழுவதுமுள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டு நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது அவைகளை திறப்பதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகாத நிலையில் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது துவங்கி அக்டோபர் 26 ஆம் தேதி வரையில் வாரத்தில் ஆறு நாட்கள் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு தொடங்குவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
author avatar
Rebekal