மொழி ஒரு பிரச்சனை இல்லை – பிரபல நடிகை பேச்சு.!

இந்தியில் சப்பாக் திரைப்படத்தை அடுத்து, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் 83வது படத்தில் கணவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தை கபீர்கான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த தீபிகா படுகோனே, ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் எனக்கு பொருத்தமான கதைகள் அமைந்தால் எல்லா மொழிகளிலும் நடிப்பேன், மொழி ஒரு பிரச்சனை இல்லை என்று குறிப்பிட்டார். இதனிடையே தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தில் நடிக்க கமிட் ஆன தீபிகா படுகோனே, பின்னர் அந்த படம் எடுக்காமல் போடப்பட்டதால் அதையடுத்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்