இம்ரான் கானுக்கு முன் ஜாமின் வழங்கியது லாகூர் உயர்நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் (LHC) இன்று பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு (ECP) வெளியே வன்முறை போராட்டங்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மார்ச் 3 ஆம் தேதி வரை லாகூர் உயர்நீதிமன்றம் பாதுகாப்பு ஜாமீன் வழங்கியது. கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் 70 வயதான கான் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் (ECP) தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, எதிர்ப்புகள் வெடித்தன. தோஷகானா வழக்கில் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என தகவல் பரவிய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு ஆதரவாக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment