காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி அனந்தனுக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு…!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி ஆனந்தனின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு.

பெருந்தலைவர் காமராசரின் சீடராகவும், காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர் குமரி ஆனந்தன். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார்.

 இந்த நிலையில், அவர் தான் வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையை குமரி அனந்தனிடம் வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment