,
INDvENG , Semi Final 2

குல்தீப்-அக்ஷர் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!!

By

டி20 அரை இறுதி: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கயானாவில் உள்ள மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியை முதலில் பேட்டிங் விளையாட அழைத்தது.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது, இந்த தொடரில் விராட் கோலி ரன்கள் எதுவும் பெரிதாக எடுக்கவில்லை அதே போல இந்த போட்டியிலும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

அதன்பின் ரிஷப் பண்ட், ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவார் என எதிர்ப்பார்க்கும் போது அவரும் 4 ரன்களுக்கு அவரது விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். அவருக்கு பின் சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாட தொடங்கினர்.

சரியாக 8 ஓவர் முடிந்தவுடன் மழை குறுக்கிட்டது, இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 80% சதவீத மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் 8 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் அடித்து அசத்தினார், பின் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து நன்றாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவர்களை தொடர்ந்து ஹர்திக் பாண்டிய ஒரு அதிரடியாக 13 பந்துக்கு 23 ரன்கள் எடுத்து கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோர்டன் 3 விக்கெட்டை எடுத்து இருந்தார்.

அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் இந்திய அணியின் பவுலரை அடிக்க ஆரம்பித்த ஜாஸ் பட்லர் 3-வது ஓவரில் அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரது விக்கெட்டை தொடர்ந்து சால்ட், பேர்ஸ்டோவ் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்ததால், இங்கிலாந்து அணி மிக மோசமாக தடுமாறியது. அதிலும் பவர்பிளே முடிந்தும் மொயின் அலி, அக்சர் பட்டேலிடம்  தனது விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியில் நின்று விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து ஒரு கட்டத்தில் 49-5 என மோசமான நிலையில் தடுமாறியது. மேலும், இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்களான குலதீப் மற்றும் அக்ஷர் பட்டேலின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணி சிக்கி சின்னாபின்னமானது.

இருவரின் பவுலிங் ஸ்பெல்லில் மட்டுமே ஆளுக்கு மூன்று விக்கட்டுகள் என 6 விக்கெட்டுகளை  இந்திய அணி கைப்பற்றி இருந்தனர். இதனால், இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்முலம் இந்திய அணி 3-வது முறையாக டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பார்படாஸ் மைதானத்தில் தென்னாபிரிக்கா அணியுடன் இறுதி போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.

Dinasuvadu Media @2023