கோவை கார் வெடிப்பு.! நெல்லையை தொடர்ந்து திருவாரூரில் காவல்துறையினர் அதிரடி சோதனை.!

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அசாருதீன் , இடியாஸ், சாஜித், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்று கிழமை கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களின் சோதனை செய்து 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அடுத்ததாக, அவருக்கு உதவியதாக, முபின் உடன் தொடர்பில் இருந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நெல்லையில், ஏர்வாடி மற்றும் மேலப்பாளையம் பகுதிகளில் இருவர் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். தற்போது அதே போல சோதனை திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது .

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அசாருதீன் , இடியாஸ், சாஜித், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே என்ஐஏ நாடு முழுவதும் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment