பாரத் பயோடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்வதற்காக 64 நாடுகளின் தூதுவர்கள் இன்று டெல்லிக்கு வந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு செல்கிறது. முந்தைய தினங்களை காட்டிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இதற்கான தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டறிவதற்காக பல்வேறு கட்டமாக ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
பாரத் பயோடெக் எனும் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து கோவாக்சின் எனும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை தயாரித்துள்ளது. இதன் பல்வேறு கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசியை கொண்டுவருவதற்கான அனுமதியை அரசிடம் இந்த நிறுவனம் கோரியிருந்தது.
இதனை அடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் மருந்து தயாரிப்புக்கான திட்டங்கள், மருந்து செலுத்துவது தொடர்பான கோட்பாடுகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்வதற்காக 64 நாடுகளின் தூதுவர்கள் இன்று டெல்லிக்கு வந்துள்ளனர். ஆஸ்திரேலியா, டென்மார்க், ஈரான் பூடான், பிரேசில், மியான்மர், இலங்கை, தென்கொரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 64 நாடுகளின் தூதர்கள் டெல்லி வந்து இறங்கியுள்ளனர். அதனை அடுத்து அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்று பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…