டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு..!

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் மோத உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

கொல்கத்தா அணி வீரர்கள்:

நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, சுனில் நரைன், மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பஞ்சாப் அணி வீரர்கள்:

கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

author avatar
murugan