கொடநாடு விவகாரம் – குஜராத் தடயவியல் நிபுணர்கள் வருகை…!

கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி  பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

பிப்.13 முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே!

இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தகவலை சேகரிக்க குஜராத் தடவியல் நிபுணர்கள் திருச்சி வந்துள்ளனர். செல்போன்,  தொலைபேசி டவரிலிருந்து தகவலை சேகரிக்க தடவியல் நிபுணர்கள் திருச்சி வந்துள்ளனர்.  திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தடவியல் நிபுணர்கள் சென்று தகவலை சேகரிக்கின்றனர்.

கோடநாடு சம்பவம் நடந்த நாளில் பதிவாகியிருந்த செல்போன், தொலைபேசி டவரில் தகவலை தடவில் குழுவினர் சேகரிக்கின்றனர்.  கோடநாடு சம்பவத்தில் தகவலை சேகரிக்க குஜராத்தில் இருந்து 2 தடவியல் நிபுணர்கள் குழு திருச்சி வந்துள்ளது. இவர்கள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படவுள்ளது.

author avatar
murugan

Leave a Comment