திருமணம் எப்போ? நச் பதில் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் எந்த ஒரு பேட்டியில் கலந்துகொண்டால் அவர்களிடம் கேட்கும் முக்கிய கேள்வியே திருமணம் பற்றிய கேள்வி என்று கூறலாம். திருமணம் குறித்த கேள்விகளுக்கு சில நடிகைகள் பதில் அளிப்பது உண்டு. சில நடிகைகள் சரியாக பதில் கூறாமல் அந்த கேள்வியை அப்படியே நிகரிப்பது உண்டு.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியாவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஆண்ட்ரியாவும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் வரும் என்று பதிலளித்தார் ஆண்ட்ரியா.

கணவரை பிரிந்தார் ராஜ்கிரண் மகள்! அழுதபடி வெளியிட்ட வீடியோ…

எனக்கு சரியாக சொல்லவேண்டும் என்றால் ஒரு  30 வயதாக இருக்கும் போது அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஆனால் இப்போது அந்த வயது கடந்துவிட்டது. இருப்பினும், இப்படி இருப்பதால் எனக்கு எந்த வலியும் இல்லை. தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை” எனவும் ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர் பெயர் வைக்கப்படாத இரண்டு தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment